Thursday, April 24, 2025

இந்தியாவின் முதல் வார இதழா

 ரஸ்ஸி கரஞ்சியா என்பவரால் 1941 Blitz , பிளிட்ஸ் சிறுபத்திரிகை தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் வார இதழாகும். இது புலனாய்வு பத்திரிகை மற்றும் அரசியல் செய்திகளில் கவனம் செலுத்தியது. ஆங்கிலத்திலும், இந்தி, உருது மற்றும் மராத்தி மொழிகளில் பதிப்புகளுடன் வெளியிடப்பட்டது. இதை டேப்ளாய்டு செய்தித்தாள் அல்லது செய்தி இதழ், சிறுப்பத்திரிக்கை என்றும் குறிப்பிடலாம்!

[[[இந்த விஷயம் எல்லா

கொஞ்சம் போராச்சே🤔🤔🤔

என்று நினைப்பவர்கள், நாலே

நாலு பாராவை கீழே

உருட்டிவிட்டு...😳😳(இணையம்

scrolldown க்கு கொடுத்த

அர்த்தம்🤣) படித்தால்,

புலனாய்வு பத்திரிக்கையில்

நம்மாளுங்க என்னவெல்லாம்

"வெச்சு செஞ்சு இருக்காங்க" ( ஆட்சி

கவிழ்த்தல் உட்பட..அடடே🤔)

என்று தெரிந்து

கொள்ளலாம்...!!!!]]]]

பிளிட்ஸ் நிறுவனத்துடன் பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் பத்திரிகையாளருமான சுதீந்திர குல்கர்னி, ஒரு கோப்பை தேநீர் அருந்தும்போது(அப்பவே "டீ" அரசியலுக்குள் நுழைந்து விட்டது போல🙈) பிளிட்ஸ் தொடங்குவதற்கான எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்!

பம்பாய் என்று அழைக்கப்பட்ட மும்பையின் கோட்டை வட்டாரத்தில் உள்ள பழைய அப்பல்லோ தெரு கட்டிடத்தில் இந்த சிறுப்பத்திரிகை தொடங்கப்பட்டது. அன்றைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் A.F.S TALYARKHAN (தல்யார்கான்) இன் சுருட்டு பிடிக்கும் புகைப்படம் மிக பிரபலம்!

இருபதாயிரத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டது. அதன் தொடக்க இதழில் ஹிட்லருக்கு எதிரான இந்தியாவின் கருத்தை அது பதிவிட்டது. இருபத்தைந்து வருடங்களில் பத்து கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்கப்பட்டதாக கராஞ்சியா கூறுகிறார்!

பிளிட்ஸ் நேருவின் ஆதரவாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது மதச்சார்பின்மையை வலுவாக ஆதரித்தது, சோசலிசம் , திட்டமிடலை ஆதரித்து, முதலாளித்துவத்தை கண்டனம் செய்து மற்றும் வலதுசாரி மீது தனது ஏளனத்தை வெளிப்படுத்தியது.

இந்தியாவிற்கும் மூன்றாம் உலகத் தலைவர்களுக்கும் எதிரான சிஐஏ சதித்திட்டங்களை சத்தம் போட்டு வெளிப்படுத்தியது.

அறுபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு தனது செய்தித்தாளைத் தொடங்கிய அதே நாளில், 2008 பிப்ரவரி 1 அன்று கரஞ்சியா இறந்தார். ஆனால் 1990 யி பிளிட்ஸ் மூடப்பட்டது.

--------------------------------------

முன்கதை சுருக்கம் 👆👆👆👆

--------------------------------------

👉👉👉👉👉இந்திய புலனாய்வு இதழியலில் ஐந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன! அவை பத்திரிகைகளின் நேர்மறையான சக்தியை எடுத்துக்காட்டுகின்றன💪💪💪💪.

1. தி இந்து" வால் போஃபர்ஸ் ஊழல் அம்பலம்

போஃபர்ஸ் தொடர்பான கிட்டத்தட்ட 200 ஆவணங்கள் 1987 இல் இந்து என்.ராம் அவர்களால் நேர்காணல்கள் மற்றும் பகுப்பாய்வுத் துண்டுகளுடன் வெளியிடப்படுவதற்கு முன்னர், ஸ்வீடிஷ் மொழியில் இருந்து இரகசியமாக ஆதாரமாக, சரிபார்க்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டன. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம்( பிரதமர் ராஜீவ் காந்தி) இறுதியில் 1989 பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது.

2.தெஹல்காவின் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அம்பலம்

மார்ச் 13, 2001 அன்று மிகப்பெரிய பூஜ் பூகம்பம், நினைவு இருக்கிறதா?? உலகமே,... உயிரிழப்பு , பொருள் சேதம் ஆகியவற்றிற்கு கை கொடுக்க இந்தியா ஓடி வந்த மாதம்!

டெஹல்கா ஒரு விசாரணை அறிக்கையை வெளியிட்டது, இது பாதுகாப்பு ஒப்பந்தங்களின் இருண்ட உலகத்தின் மூடியைத் திறந்து விட்டது!

"ஆபரேஷன் வெஸ்ட் எண்ட்" இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்போதைய பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மன் உட்பட ஆளும் கூட்டணியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஆயுதப்படையின் குறைந்தபட்சம் ஐந்து உயர்மட்ட உறுப்பினர்களின் வேலைகளை காலி செய்ய வைத்தது,(லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக)..அப்போது NDA ( சமதா கட்சி, பிஜேபி மற்றும் இதர கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சி). மற்றுமோர் சுவாரஸ்யமாக ,தெஹல்கா இந்திய கிரிக்கெட்டில் வெடிக்கும் மேட்ச் பிக்சிங் ஊழலை கண்டுபிடித்தது அதே வருடத்தில் தான்!

https://sport360.com/article/cricket/cricket_india/178666/rewind360-the-tehelka-tapes-a-story-of-corruption-in-cricket-that-shook-the-nation

3. இந்தியன் எக்ஸ்பிரஸின் சிமெண்ட் ஊழல்!

ஆகஸ்ட் 31, 1981 அன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ செய்தித்தாள் காலை நிரப்பப்பட்ட விஷயம்,.... அரசாங்க சிமெண்ட் ஒதுக்கீட்டின் மானியத்தில் ஊழல் பற்றி உன்னிப்பாக-ஆராய்ச்சி செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் 7,500 வார்த்தைகளில் ஒரு பெரிய கட்டுரை முன் பக்கத்தில்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் அப்போதைய நிர்வாக ஆசிரியராக இருந்த அருண் ஷோரி, ஒரே நாளில் தேசிய "ஹீரோ" ஆனார்.

4. இந்தியன் எக்ஸ்பிரஸின் மனித கடத்தல் அம்பலம்😳😳

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர், மனித கடத்தல் பற்றிய அவரது கூர்மைய அறிக்கைக்காக மிகவும் பிரபலமானார்.இது வியாபாரத்தை சுற்றி ஒரு முழு உரையாடலை உருவாக்கியது, அது சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். 1981 ஆம் ஆண்டில், அவர் சட்டத்தை மீறுவதன் மூலம் மோசமான மோசடியை அம்பலப்படுத்தினார் (அவர் கமலா என்ற பழங்குடி பெண்ணை வாங்கியபோது) மற்றும் இந்தியாவில் மனிதர்களை வாங்குவது எவ்வளவு எளிது என்பதைக் காட்டினார். அவரது படைப்புகள் திரைப்படம் மற்றும் நாடகத்திற்கு உத்வேகம் அளித்தது 'கமலா'.

When An Express Reporter Broke Law And Purchased a woman for Rs 2,300 to write a shocking story on trafficking
The memory was dusted by Shekhar Gupta, the former Editor in chief of Indian Express and founder of online news portal Print, during a Twitter debate on whether UIDAI was justified in filing a case against The Tribune reporter

5.நாஓபன் இதழின் நீரா ராடியா டேப்ஸ்,நவம்பர் 2010..

ஓபன் இதழ் நீரா ராடியா (அரசியல் பரப்புரையாளர் மற்றும் PR ஹோன்சோ) மற்றும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல்களின் டிரான்ஸ்கிரிப்ட்களை வெளியிட்டது. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் ரகசியத் தகவலின் பேரில் வருமான வரித் துறையால் ஒட்டுக்கேட்கப்பட்ட நாடாக்கள் - ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கும்(😳😳😳), பொதுமக்களின் கருத்தை பாதிக்கும் வகையில் நாட்டின் மிக உயர்ந்த மட்டங்களில் நடக்கும் சூழ்ச்சிகளையும் , மற்றும் பெருநிறுவன நலன்களை மட்டும் பூர்த்தி செய்தல் ஆகியவற்றை மிக கடுமையாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இது போன்ற கடினமான மற்றும் நேர்மையான, பத்திரிகை முயற்சிகளால்தான் பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றன. அது அப்போ…🤗🤗

👆👆👆👆👆 இதெல்லாம் நம்ம பணம்னு சொன்னா அடிக்கவா வருவாங்க..யோசிக்க மாட்டாங்க?!?🤔🤔🤔பார்ப்போம்?*"_&!? நன்றி ஐஸ்வர்யா ரவிசங்கர் மாலினி✓

Wednesday, February 5, 2025

KING MAKER !

 


ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி !

KING MAKER !

இது தான் பெருந்தலைவரின் பட்டம் !

பழைய காங்கிரஸ் கட்சியில் ராஜாவை உருவாக்கும் இடத்தில் இருந்தவர் இந்த ஏழை பங்காளன் !

ராஜாவை நியமிப்பவர் யார் ?

மகாராஜா !

எளிமையான அந்த மகராசன் தான் மகாராஜா !

நேரு மறைந்த உடன் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பிறந்தது !

மொரார்ஜி என்ற காந்தியவாதி / சாஸ்திரி என்ற மாமனிதர் / இந்திரா காந்தி ….இந்த பட்டியலில் காமராஜர் பெயர் இல்லை !

காரணம் ___

காமராஜர் பிரதமராக விரும்பினால் யாரும் போட்டியிட போவதில்லை என்ற அறிவிப்பு வந்தது !

"அன்ன போஸ்ட்" டாக வந்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறிய தமிழ் மக்களின் தெய்வம் காமராசர் !

ஆனால், பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு காமராஜருக்கு வழங்கப்படடது!

அவர் தேர்ந்தெடுத்தது லால் பகதூர் சாஸ்திரி !

காலத்தின் கோலம் / மர்ம சதி / இயற்கையின் விளையாட்டு இதில் ஏதோ ஒன்றால்

சாஸ்திரி காலமானார் !

பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு மீண்டும் பெருதலைவருக்கு வந்தது !

இந்திராவை தேர்ந்தெடுத்தார் கிங் மேக்கர்!

காமராஜர் கொண்டு வந்த மற்றொரு மாபெரும் திட்டம் கே. பிளான் !

பதவியிலிருந்து வயதானவர்கள் தாமே முன் வந்து விலகி, இளைஞர்களை முன்னே கொண்டு வருவது தான் காமராஜ் பிளான் !

இதற்கு முன் மாதிரியாக, தாமே முதல்வர் பதவியை உதறி, பக்தவச்சலத்தை முதல்வராக்கினார் பெருந்தலைவர் !

காமராஜர், அகில இந்திய காங்கிரசின் அதிபர் !

காந்தியின் தொண்டன் !

தேச பக்தன் !

அவர் யாருக்கும் அடிமையில்லை!

ரஷ்யாவுக்கு பயணம் செய்த போது கூட அதே எளிமை !

தம்பி ஜாக்கிரதை ! திருசெந்தூர் பக்கம் போய் , இந்த கேள்வியை கேட்டு வைக்காதீங்க !

வதம் செய்து விடுவான் முருகன் !

"என்னான்னேன் ! நான் எழுதிய பதில் சரிதான்னேன் ? "

————————— P A R T 2 —————————

1965 ஆம் ஆண்டில், சீனாவின் தூண்டுதலால் பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடுத்தது. ஒரு தடவை கோட்டை விட்டோம். இப்ப பதிலடி ! " வரவேற்றது இந்திய ராணுவம் !

தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான், கொரில்லா போர் முறையை கையாண்டது !

பஞ்சாப் மாநிலத்தின் விவசாய நிலத்தை துவம்சம் செய்தது !

பாசுமதி/ கோதுமை விளைச்சல் நிலம் கொழுந்துவிட்டு எரிந்தது !

ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் தர பெருந்தலைவர் அங்கே சென்றார் !

பிரதமர் சாஸ்திரி தடுத்தார் , " உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம் "

"போர்களத்தில் என் உயிர் போவது எனக்கு பெருமை "

அப்போது தான் அவரை " காலா காந்தி " என்று கொண்டாடினார்கள்.

பிரதமரின் அன்பு கட்டளையை மீறினார் தலைவர் !

காமராஜர் ஆட்சி , தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றது .

அவர் போட்ட பலமான அடித்தளத்தில் திராவிட கட்சிகள் பயணித்தது என்பதே உண்மை !

நெய்வேலி நிலக்கரி திட்டம் -

பாரத கன ரக தொழிற்சாலை

ஐ.சி.எஃப்

HVD

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை

இதெல்லாம் பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் வந்தது !

இப்படி ஒரு படம் கொடுக்க யாருக்கு தில்?

எளிமையாக வாழ்ந்தார் காமராஜர்

அடிமையாக இல்லை !

Saturday, January 11, 2025

உலகப் புகழ்பெற்ற போரின் "காட்சிகளை"

 உலகப் புகழ்பெற்ற போரின் "காட்சிகளை" விளக்கும் படங்கள்!மேலும்விரிவானதகவலுக்கு-விக்கிபீடியா.

நன்றி.

இந்தியாவின் முதல் வார இதழா

  ரஸ்ஸி கரஞ்சியா என்பவரால் 1941 Blitz , பிளிட்ஸ் சிறுபத்திரிகை தொடங்கப்பட்டது, இது இந்தியாவின் முதல் வார இதழாகும். இது புலனாய்வு பத்திரிகை ம...