ஐம்பது வருடத்துக்கு முன் நடந்த சரித்திரம் தெறியாமல் வந்து விழுந்த கேள்வி !
KING MAKER !
இது தான் பெருந்தலைவரின் பட்டம் !
பழைய காங்கிரஸ் கட்சியில் ராஜாவை உருவாக்கும் இடத்தில் இருந்தவர் இந்த ஏழை பங்காளன் !
ராஜாவை நியமிப்பவர் யார் ?
மகாராஜா !
எளிமையான அந்த மகராசன் தான் மகாராஜா !
நேரு மறைந்த உடன் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி பிறந்தது !
மொரார்ஜி என்ற காந்தியவாதி / சாஸ்திரி என்ற மாமனிதர் / இந்திரா காந்தி ….இந்த பட்டியலில் காமராஜர் பெயர் இல்லை !
காரணம் ___
காமராஜர் பிரதமராக விரும்பினால் யாரும் போட்டியிட போவதில்லை என்ற அறிவிப்பு வந்தது !
"அன்ன போஸ்ட்" டாக வந்த பிரதமர் பதவியை வேண்டாம் என்று உதறிய தமிழ் மக்களின் தெய்வம் காமராசர் !
ஆனால், பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு காமராஜருக்கு வழங்கப்படடது!
அவர் தேர்ந்தெடுத்தது லால் பகதூர் சாஸ்திரி !
காலத்தின் கோலம் / மர்ம சதி / இயற்கையின் விளையாட்டு இதில் ஏதோ ஒன்றால்
சாஸ்திரி காலமானார் !
பிரதமரை தேர்வு செய்யும் பொறுப்பு மீண்டும் பெருதலைவருக்கு வந்தது !
இந்திராவை தேர்ந்தெடுத்தார் கிங் மேக்கர்!
காமராஜர் கொண்டு வந்த மற்றொரு மாபெரும் திட்டம் கே. பிளான் !
பதவியிலிருந்து வயதானவர்கள் தாமே முன் வந்து விலகி, இளைஞர்களை முன்னே கொண்டு வருவது தான் காமராஜ் பிளான் !
இதற்கு முன் மாதிரியாக, தாமே முதல்வர் பதவியை உதறி, பக்தவச்சலத்தை முதல்வராக்கினார் பெருந்தலைவர் !
காமராஜர், அகில இந்திய காங்கிரசின் அதிபர் !
காந்தியின் தொண்டன் !
தேச பக்தன் !
அவர் யாருக்கும் அடிமையில்லை!
ரஷ்யாவுக்கு பயணம் செய்த போது கூட அதே எளிமை !
[ தம்பி ஜாக்கிரதை ! திருசெந்தூர் பக்கம் போய் , இந்த கேள்வியை கேட்டு வைக்காதீங்க !
வதம் செய்து விடுவான் முருகன் !
"என்னான்னேன் ! நான் எழுதிய பதில் சரிதான்னேன் ? "
————————— P A R T 2 —————————
1965 ஆம் ஆண்டில், சீனாவின் தூண்டுதலால் பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடுத்தது. ' ஒரு தடவை கோட்டை விட்டோம். இப்ப பதிலடி ! " வரவேற்றது இந்திய ராணுவம் !
தோற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான், கொரில்லா போர் முறையை கையாண்டது !
பஞ்சாப் மாநிலத்தின் விவசாய நிலத்தை துவம்சம் செய்தது !
பாசுமதி/ கோதுமை விளைச்சல் நிலம் கொழுந்துவிட்டு எரிந்தது !
ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் தர பெருந்தலைவர் அங்கே சென்றார் !
பிரதமர் சாஸ்திரி தடுத்தார் , " உங்கள் உயிர் எங்களுக்கு முக்கியம் "
"போர்களத்தில் என் உயிர் போவது எனக்கு பெருமை "
அப்போது தான் அவரை " காலா காந்தி " என்று கொண்டாடினார்கள்.
பிரதமரின் அன்பு கட்டளையை மீறினார் தலைவர் !
காமராஜர் ஆட்சி , தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றது .
அவர் போட்ட பலமான அடித்தளத்தில் திராவிட கட்சிகள் பயணித்தது என்பதே உண்மை !
நெய்வேலி நிலக்கரி திட்டம் -
பாரத கன ரக தொழிற்சாலை
ஐ.சி.எஃப்
HVD
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை
இதெல்லாம் பெருந்தலைவர் ஆட்சி காலத்தில் வந்தது !
இப்படி ஒரு படம் கொடுக்க யாருக்கு தில்?
எளிமையாக வாழ்ந்தார் காமராஜர்
அடிமையாக இல்லை !
No comments:
Post a Comment