இப்படியும் ஒரு மனிதரா என நீங்கள் கண்டு வியந்த மனிதர் யார்? ஏன்?
தினமும் வாசிக்கிற பழக்கம் இருக்குறதால , நான் பல மனிதர்களை பார்த்து வியந்திருக்கேன் .இந்த கேள்வியை படித்ததும் ஞாபகத்துக்கு வந்தது ஷியாம் சுந்தர் பாலிவால்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு ,
ராஜஸ்தான் மாநிலத்துல இருக்குற ஒரு குக்கிராமம், பிப்லாந்திரி(Piplantri) .
அந்த கிராமத்த பொறுத்தவரைக்கும், பெண் குழந்தை பிறந்த செய்தி தான் ,அவங்களுக்கு மிக பெரிய கெட்ட செய்தி .காரணம் ,அவங்க சமுதாயத்தில் இருக்கும் வரதட்சணை பழக்கவழக்கம்.
அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவரும்,சமூக ஆர்வலருமான ஷியாம் சுந்தர் பலிவால் ,தன் கிராமத்தின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ஒரு திட்டத்தை யோசித்து,அரசாங்க உதவியுடன் நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில்,பல தடைகள் இருந்தது,மக்களும் பெரிதாக ஒத்துழைக்கவில்லை.
பிறகு ,அந்த கிராமத்திற்கு,அரசாங்கம் பல நல திட்ட உதவிகளை அளித்தது,ஷியாமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார் .இதன் காரணமாக ,மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர்,கொஞ்சம் கொஞ்சமாக திட்டத்திற்கு அந்த கிராமமே ஆதரவு அளித்தது.
என்ன திட்டம் ?
பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் திட்டம்.
அதாவது ,ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன்,பெற்றோர்கள்,உறவினர்கள் 111 மரக்கன்றுகளை நடவேண்டும்.
நட்ட மரக்கன்றுகளின் பராமரிப்புகளை ,கிராம பஞ்சாயத்து மற்றும் தன்னார்வல குழுக்கள் கவனித்து கொள்ளும்.
பிறந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,பெற்றோர்களிடம் பத்தாயிரம் ரூபாயும் ,கிராம பஞ்சாயத்து மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கூடுதலாக 21,000 ரூபாய் ,ஆக மொத்தம் 31,000 ரூபாய்,வங்கியில் Fixed டெபாசிட் செய்யப்படும்.
அதே போல்,பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி படுத்த , பத்திரத்தில் பெற்றோர்களிடம் திட்ட அம்சங்கள் எழுதப்பட்டு ,கையொப்பம் வாங்கப்படும்.
பத்திரத்தில் உள்ள அம்சங்கள் :
1) எங்கள் குடும்பத்தில் உள்ள யாரும் பெண் சிசு கொலைகளை செய்ய மாட்டோம்.
2) நடப்பட்ட 111 மரங்களும் ,எங்கள் மகளும்,சமமான அக்கறையுடன் வளர்க்க படுவார்கள்.
3) எங்கள் மகளுக்கு கல்வி படிப்பு கட்டாயமாக கற்றுவிக்க படும்.
4) எங்கள் மகளுக்கு,குழந்தை திருமணங்கள் ,செய்ய மாட்டோம்.
5) Fixed டெபொசிட்டில் உள்ள பணம் ,எங்கள் மகளின் திருமணத்திற்காகவே செலவிடப்படும்.
6) நாங்கள் நட்ட மரங்கள் அனைத்தும் இந்த கிராமத்தின் சொத்து.
18 வருடங்கள் கழித்து,பெண் குழந்தை வளர்ந்ததை போல்,நட்ட மரக்கன்றுகளும் பெரிய மரமாக வளந்திருக்கும்
18 வருடங்களின்,Fixed டெபொசிட்டில் உள்ள பணமும் சில லட்சங்களாக பெருகியிருக்கும்.இந்த பணம் கண்டிப்பாக திருமணத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.
அதே போல், ஒரு மரத்தினால் வருடத்திற்கு 5000 ரூபாய் வருமானம் கிடைத்தது என்றாலும் ,18 வருடங்களில் கிட்டத்தட்ட,ஒரு மரத்துக்கு, 1 லட்ச ரூபாய் கிடைக்கும்.
அப்போது ,வளர்க்கப்பட்ட 111 மரங்களால் ,18 வருடங்களில் கிட்ட தட்ட 1 கோடியே 11 லட்சம் ரூபாய்.
இதுபோக,சுத்தமான சுவாச காற்று,சுற்றுசூழல் பாதுகாக்கப்பட்டு மற்றும் மண் வளம் , வளமும் மேன்படும்.
மரங்களின் மூலம் ,பிப்லாந்திரி மக்களுக்கு வேலைவாய்ப்பும் பெருகியது .
வருடாவருடம் ரக்ஷா பந்தன் அன்று பெண் குழந்தைகள் ,வளர்க்கபடும் மரங்களுக்கு கயிறு கட்டுவர்.
இவை அனைத்தும் ஒரு பெண் குழந்தை பிறந்ததினால் உண்டான பலன்.கல்வி பெற்று அவளும் பலன் அடைந்தாள் ,கிராமமும் பலன் அடைந்தது
கடந்த ஆண்டு நடந்த கணக்கீடு படி,பிப்லாந்திரி கிராமத்தில் 810 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது,அதாவது ,89 லட்சத்து 910 மரங்கள் பராமரிக்க படுகிறது.
ஒரு பெண் பிறந்ததினால் உண்டான பலன்களை கண்டோம்,810 பெண்கள் என்றால் பெண்களும்,கிராமமும் அடைந்த பலன்களை நினைத்து பாருங்கள்.
ஷியாம் ,இறந்து போன மகளின் ஞாபகமாக இந்த திட்டத்திற்கு கிரண் நிதி யோஜனா என பெயரிட்டார்.
ஷியாமின் இந்த திட்டத்தை அறிந்த பல கிராமங்கள்,இதே திட்டத்தை செயல் படுத்துகின்றனர் .
இந்த திட்டம் இவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது.
இந்த கிராமத்தை பற்றியும் இந்த திட்டத்தை பற்றியும் ,டென்மார்க் மற்றும் ராஜஸ்தான் பள்ளிப்பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமத்தின் நுழைவாயிலில் ,ஒரு பெரும்பலகையில் ,கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தைகளின் பெயர் குறிப்பிட்டிருக்கும்.
ஷியாமின் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட ராஜஸ்தான் அரசாங்கம் ,2016 ஆம் ஆண்டு,ஒரு திட்டத்தை அறிவித்தது.
அதாவது ,பெண் குழந்தை பிறந்தவுடன்,அரசாங்கம் ,அந்த குடும்பத்திற்கு 2500 ரூபாய் அளிக்கும்.பெண் குழந்தையின் முதல் பிறந்த நாளன்று,மேலும் 2500 ரூபாய் அளிக்கும்.இந்த 5000 ரூபாய் ,அவள் 5ஆம் வகுப்பு கடந்தவுடன் இரட்டிப்பாகும்,8ஆம் வகுப்பு கடந்தவுடன் மேலும் இரட்டிப்பாகும்.பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன்,35,000 ரூபாய் கிடைக்கும் .ஆக மொத்தம் 50,000 ரூபாய் கிடைக்கும்.
இந்த கிராமத்தை மையமாக வைத்து பிப்லாந்திரி எனும் மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படமும் வந்தது.
ஒரு மனிதனால் ,சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்பதற்கு இவரும் ஒரு சான்று.
No comments:
Post a Comment